இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

செவ்வாய், 1 நவம்பர், 2011

இசைஞானி மனைவியார் ஜீவா அம்மையாருக்கு அஞ்சலி!!!

தமிழகத்தின் கடைக்கோடியில் பண்ணைபுரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, இசையின் சகல உயரங்களையும், சிகரங்களையும் தொட்டு, அரிய இசை நுட்பங்களையும் கைவரப்பெற்ற இசைஞானிக்கும் அவரது மக்கட்கும் திருமதி.ஜீவா அம்மாவின் மரணம் மிகப்பெரிய இழப்பாகும்.இசைஞானியின் மகத்தான சாதனைகளுக்கு பின்னால் ஜீவா அம்மையாரின் கட்டுக்கோப்பான வீட்டு நிர்வாகம், ஒத்துழைப்பு, புரிந்துணர்வும் மிகவும் குறிப்பிடத்தக்கது.

அதை இசைஞானியின் கடைக்கோடி ரசிகனான என்னால் கண்கூடாக உணரமுடிகிறது, இனி ஆற்றிடவும் தேற்றிடவும் யாரால் முடியும்?!!!,மனைவியின் இழப்பால் வாடும் அந்த இசைக்கு எல்லாம் வல்ல மகேசன் சர்வ வல்லமையையும் தந்தருள வேண்டும்,அவர் விரைவாக இதை கடந்து வரவேண்டும். என நெஞ்சுருக வேண்டுகிறேன்.அந்த இசை குடும்பத்தின் சோகத்தில் நாமும் பங்கேற்போம் .
===000===
Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99